Thursday 20 April 2017

விடியாத இரவுகள் ❤


பேங்காக் எல்லாருக்கும் சொர்க்க பூமின்னா எனக்கு அதுக்கும் மேல. பொதுவா நாம எந்த இடத்தையும் மிஸ் பண்றதில்ல அந்த இடம் தந்த அனுபவத்தையும் மெமோரிசையும்தான் மிஸ் பண்றோம். தாமிரபரணி ஊருல பொறந்தாலும், தாய்லாந்தின் சோ பரயா நதியின் மீது ஆக சிறந்த பினைப்பு எனக்கு. 372 Km நீளம் உள்ள நதி, பேங்காக் சிட்டியோட மூலை முடுக்கெல்லாம் தொட்டுச்செல்லும் நதி, பேங்காக் வர்த்தகத்தின் பேக் போன். 

தன் மொத்த நீளத்தில் பல அழகான பாலங்களையும், அகலத்தில் பல அழகான சீனரீசையும் உள்ளடக்கியது. ஊரை மிரட்டும் இடியும் தரை தொடும் மின்னலும் சர்வசாதாரணம் அங்கு. பேய் மழை பாத்து நனைந்ததெல்லாம் அங்கேதான். நண்பர்கூட்டம் மத்தில் அடிக்கடி நான் காணாமல் போய்விடுவேன், ஒரு நாள் நெருக்கமான உறவொன்று அப்படி எங்குதான் போவாய்? சிரித்தபடி கண்மூடி கதை சொன்னேன். 

100 தாய் பாத் குடுத்தா ஒரு சின்ன போட்காரன் என்னை ரிவர்புல்லா சுத்தி காட்டுவான், அதுவும் மழை மின்னல் நேரத்தில் போக கொள்ளை பிரியம். இடி சத்தம் கேட்டால் போதும், சைக்கிளில் கிளம்பிவிடுவேன். வாடிக்கையான கடையில் நண்டு கிரேவி, தாய் பிரைடு ரைஸ் வாங்கிட்டு சைக்கிளை பாதுகாக்க கோரிக்கை வைத்து 2 சாங் டின் பியர் வாங்கி நதிகரை போவேன். எனக்காகவே காத்திருக்கும் போட்மேனுக்கு அந்த 2 சாங், போட் கிளம்புகிறது இல்லை சீறி பாய்கிறது. 

நதி நடுவே நிருத்த சொல்லி எழுந்து நின்று ஆனந்தத்தில் ஆர்பரிப்பேன், கூச்சலிடுவேன், கண்சிமிட்டி கண்சிமிட்டி மின்னல் நதியோடு முத்தமிடும் காட்சியை கண்டு குதூகலிப்பேன், மழைநாளில் முகம் தொட்டு மசாஜ் செய்யும் மழைத்துளியை கையேந்தி நிற்பேன். கரையின் மறுபக்கம் பல வித பாம்புகள் இருக்கும் சற்று அபாயமான இடம்தான் ஆனாலும் அங்குள்ள மின்மினி பூச்சிகள் கொள்ளை அழகு. தொட்டு பிடித்து விளையாடி களைத்தபின் அழைப்பு கொடுக்கும் பெயர் தெரியா நண்பர் வீட்டில் அவர்தரும் சூப் பருகி பயணத்தை தொடர்வேன். 

இந்த முறை சயணநிலையில், தண்ணீரை கிழித்து பல பெரிய கப்பல்களை தாண்டி முந்தி செல்கிறது எங்கள் படகு, வானம் பார்க்கும் அழகுடன், விண்னை தொடும் பல அடுக்கு மாடிகள், ராமா3 பிரிஜ் அத்தனை பிரம்மிப்பு, அப் பயணத்தில் அத்தனை நிம்மதி அத்தனை அழகு அக்குளிர்ந்த காற்று அகம் புறம் வருடிச்செல்லும். சில பொர்ணமி நாட்களில் 3 மணிநேரம்கூட தனிமையில் நதியுடனும் நிலவுடனும் உறவாடி மகிழ்ந்திருக்கிறேன். அந்த சுகம், போதையாகி நதி காதலன் கான செல்கிறேன். 

கதை சொல்லி கண்விழிக்கிறேன், நட்பு கேக்கிறது ஏடா தனியா ராத்திரில அவ்வளவு பெரிய நதில மொழி தெரியாத இடத்துல பயமா இல்லையா? இயற்கைக்கு தெரிந்தது இரண்டே விஷயம். ஒன்று அழகு இன்னொன்று அன்பு. இப்படியாய் சொல்லி முடித்தேன். என்னையும் கூட்டிட்டு போறியா ப்ளீஸ் கேட்கிறது நட்பு! கண்கண்ட அழகு குடித்து செரித்தும் செரிக்காமலும் பலநாள் தூங்காமல் விடிந்திருக்கிறது என் இரவுகள்!! எனக்கென ஒர் இடம் அந்நதிகரையில் இப்போதும் காத்திருக்கிறது, எனக்கான கல்லரை அந்நதிகரையில் எழுப்ப படுமாயின் எனக்கு இறந்தும் சொர்க்கமே சியர்ஸ் 😍❤ ....

No comments:

Post a Comment