Sunday 26 February 2017

ரசித்தலும் மெச்சுதலும்...

ரசித்தலும் மெச்சுதலும்....

ரசித்தல் வாழ்வின் யதார்தமான ஸ்வாரஸ்யம்.. மெச்சுதல் ஒரு மோகம். அதற்கென வயது வரம்போ பாலின வேறுபாடோ கிடையாது. ஏதோ ஒரு வகையில் நாம் அனைவரும் தன்னை தானே ரசித்து மெச்சக்கூடியவர்களே. நம்மை உந்திகொண்டே இருக்கும் விசையும் அதுவே.

ஆண்களின் மெச்சுதல் மோகம் பெரும்பாலும் அவர்களின் ஆளுமையை பொருத்ததே. நான் வல்லவன், வீரன், எனக்கு எல்லாம் தெரியும், இதுபோன்ற ஆளுமை சார்ந்த மோகத்திலே மூழ்கி கிடக்கின்றனர். பெரும்பாலும் எதிர்பாலரிடத்தில் அவர்களின் ஈர்ப்பில் அம்மா அக்கா போன்ற குடும்ப சாயம் பூசப்படுவதில்லை. யதார்தமா கலர்புல்லா இருக்குற எல்லாத்தையும் ரசிப்பாங்க ஆனால் மெச்சுதலில் மெச்சூரிட்டியை கோட்டை விட்டுருவாங்க. அங்கதான் அவங்களுக்கு ஆப்பே.

பெண்களின் ரசித்தல் மிக சிம்பிளானது.. தன் ரசனையில் முக்கியமா ஆண் ரசனையில் தன் தந்தையின் சாயலில் இருந்து சகோதர சாயம் வரை தேடுவார்கள். அது உளவியல், டிரெஸ், ஹேர் ஸ்டைல் இப்படி எதுவா வேண்டுமானாலும் இருக்கலாம். சின்ன சின்ன விஷயங்களிலும் அதிகம் ஆனந்தம் தேடி கொள்வார்கள்.. நெயில் பாலிஸ் அழகா இருக்கு என்பதே ஒரு நாள் முழுவதும் இன்பத்தை தரக்கூடியது. எதிர்பாலரை மெச்சுவதிலும் அதன் சூசகத்திலும் இவங்கள மிஞ்சமுடியாது.

சிறு வயதில் ஆண் பிள்ளைகளுக்கு இல்லாத மீசை தாடியின் மீது ஈர்ப்பு வருவது ஆளுமையின் மீதான காதலே. பெண் பிள்ளைகள் தாவனி கட்டி பார்பதும் நகம் வளர்பதும் அழகியல் சார்ந்த ஈர்ப்பே. இந்த ரசனை ஒரு பேன்டசி உலகை உருவாக்கும் மெச்சுதல் ஒரு ஸ்டிராய்டை உடலுக்குள் மூளை முடுக்கெல்லாம் செலுத்தும் அதுக்காகவே நாம் தலைமுதல் கால் வரை மெனக்கிடுறோம்.

ரசித்தலும் மெச்சுதலும் இல்லாத நிலையில் வாழ்க்கை ஸ்வாரஸ்யம் இழந்து ஈடுபாடில்லாது ரொம்ப மெக்கானிக்கலா போகும். அழகு, சிரிப்பு முதல் அழுகை வரை எல்லாத்திலும் நிரம்பி வழிகிறது அள்ளி பருகுங்கள்... திகட்டாதிருக்க மெச்சுங்கள்.

வாழ்வியலின் சுவையே ரசித்துலும் மெச்சுதலும்.. அதனில் சிறந்ததொரு போதை இல்லை... அழகை ஆராதியுங்கள் மெச்சுதலில் மெய் மறந்து முக்தி அடையுங்கள்.. பிறவிப்பலன் எய்துங்கள்.
சியர்ஸ்... ❤❤

No comments:

Post a Comment